
ஐசிசியின் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நேருக்கு நேர் மோதவுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா மற்று பாகிஸ்தானின் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் இங்கிலாந்து மகளிர் அணியையௌம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
ஹீதர் நைட் தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்த இங்கிலாந்து அணியில், நட்சத்திர தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட், வேகப்பந்து வீச்சாளர்கள் கேட் கிராஸ் மற்றும் லாரன் ஃபில்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம் ஹீத நைட், டேனியல் வையட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, ஏமி ஜோன்ஸ், சோஃபி எக்லெஸ்டோன், மையா பௌச்சர் ம்ற்றும் சார்லீ டீன் உள்ளிட் நட்சத்திர வீராங்கனைகள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொண்டனர்.