
"Enjoyed every part of my innings, it was amazing", RR's Yashasvi after maiden IPL hundred against M (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டி ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 1000- ஆவது போட்டியாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் 21 வயதான மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் ஜெய்சுவால் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.
முன்னதாக 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட முதல் போட்டியில் கொல்கத்தா அணியின் பிராண்டன் மெக்கலம் 158 ரன்கள் குவித்து அசத்தினார். இன்று 1000 ஆவது போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 124 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.