
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஈயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மோசமான ஃபார்ம் மற்றும் காயங்கள் காரணமாக அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும்ம்\ உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் ஒருநாள், டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் தலைசிறந்த அணியாக இங்கிலாந்து திகழ்வதற்கு முக்கியப் பங்களித்த மார்கனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர்.
இதுகுறித்து பேசிய ஜோஃப்ரா ஆர்ச்சர், “மோர்கனின் ஓய்வு அறிவிப்பு நான் எதிர்பாராதது. உலகக் கோப்பைப் போட்டி தொடங்கும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் பெரிதாகப் பங்களிக்க முடியாததால் அணியிலிருந்து விலகுவது இதுவே சரியான நேரம் என அவர் நினைத்துள்ளார். நான் அப்படி நினைக்கவில்லை. மற்றவர்களும்.