
ஐசிசியின் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சிறப்பானதான அமையவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா. அதன்பின் இரண்டாவது போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது.
தொடர்ச்சியான இந்த இரண்டு தோல்விகளால் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “கடந்த 2019 ஆம் ஆண்டில் லீக் போட்டிகளில் இந்தியாவிடமும், தென்னாப்பிரிக்காவிடமும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. கடந்த ஆண்டும் எங்களுக்கு இந்த இரண்டு அணிகளே சவாலாக இருந்தது. நாங்கள் சிறிது காலம் விளையாடமல் இருந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.