
டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது என்பதால், ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட இருந்தார். ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ரோஹித் சர்மா, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. அதனால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்திய அணியின் முக்கியமான வீரர் மட்டுமல்லாது, இப்போது கேப்டனாகவும் உருவெடுத்துள்ள ரோஹித் சர்மா, காயத்தால் நிறைய போட்டிகளை தவறவிடுவது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும்.