-mdl.jpg)
இலங்கை அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் மற்றும் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ். இலங்கை அணிக்காக கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
இதுவரை இலங்கை அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகாளில் விளையாடி 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்களுடன் 8167 ரன்களையும், பந்துவீச்சில் 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், “நான் மிகவும் விரும்பப்படும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு விடைபெற வேண்டிய நேரம் இது! இலங்கைக்காக கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை. ஒருவர் தேசிய ஜெர்சியை அணியும்போது ஏற்படும் தேசபக்தி மற்றும் அடிமைத்தன உணர்வை எதுவும் ஈடுசெய்ய முடியாது. நான் கிரிக்கெட்டிற்காக எனது அனைத்தையும் கொடுத்துள்ளேன்.