Advertisement

அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!

அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 15, 2024 • 20:37 PM
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்! (Image Source: Google)
Advertisement

தற்போது உலக கிரிக்கெட்டில் இருக்கும் உலகத் தரமான சுழற் பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்மையான இடத்தில் இருக்கிறார். அவருடைய போட்டியாளரான ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதில் ஒரு வேதனையும் வியப்பமான விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவர் மட்டும் தான் இருக்கிறார்கள்.

நாதன் லயன் தற்பொழுது 500ஆவது டெஸ்ட் விக்கட்டை உள்நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கைப்பற்றி விட்டார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 95 டெஸ்ட்களில் 179 இன்னிங்ஸ்களில் 490 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். தற்பொழுது அஸ்வின் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை மிக அருகில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

Trending


இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த மாதம் இறுதி முதல் விளையாட இருக்கிறது. உள்நாட்டில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் வெகு எளிதாக அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டை பெற்றுவிடுவார் என்பது உறுதி.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ள இடது கை பேட்ஸ்மேன் பென் டக்கட் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பாராட்டி பேசியுள்ளார். அஸ்வின் குறித்து பேசிய அவர், “அஸ்வினுக்கு எதிராக நான் இரண்டு போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ் விளையாடுகிறேன். ஆனால் அதற்குப் பிறகு நான் நிறைய விளையாடி விட்டேன். இந்த ஆண்டுகளில் எனக்கு கிடைத்திருக்கும் மெச்சூரிட்டி பெரியது.

இந்த நேரத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு எதிராக இந்தியா அணி என்ன செய்தாலும் அது ஆச்சரியமான ஒன்றாக இருக்காது. நான் இந்திய ஆடுகளங்கள் மாதிரியான ஆடுகளங்களில் விளையாடி இருக்கிறேன். எனவே நான் ஆட்டம் இழந்து வெளியேறும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருக்காது.

அஸ்வினுக்கு எதிராக இந்திய சூழ்நிலையில் கடைசி லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் நான் மட்டும் கிடையாது. அவர் எல்லா இடங்களிலுமே நன்றாக செயல்பட கூடியவர். அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர். இந்திய சூழ்நிலையில் ஆடுவதற்காக, நான் அதிரடியாக ஆட வேண்டும், எல்லா பந்தையும் ஸ்வீப் அடிக்க வேண்டும் என்று நினைக்க போவதில்லை” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement