
இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளை ஓய்வு நாளாக அமைந்து, நாளை மறுநாள் அக்டோபர் ஐந்தாம் தேதி, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி கண்ட நியூசிலாந்து, இரண்டு அணிகளும் முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன.
உலகக்கோப்பை மிக நெருக்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்கள், முன்னாள் இந்நாள் வீரர்கள் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார்கள். நடந்து முடியும் உலகக் கோப்பை எண்ணற்ற சிறப்பான சம்பவங்களையும், பரபரப்பான நிகழ்வுகளையும் கொண்டுதான் அமையும். உலகக் கோப்பைக்கு முன்பு எண்ணற்ற கணிப்புகள் இருந்தாலும், அவையெல்லாம் உலகக் கோப்பையில் கொஞ்சம் மாறி வருவதுதான் விளையாட்டின் சிறப்பு.
இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் கேப்டன் பாப் டு பிளிசிஸ் இடம், நடக்க இருக்கும் உலக கோப்பையில் எந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.