
Fans will be allowed for the Madhya Pradesh vs Mumbai Ranji Trophy 2022 final (Image Source: Google)
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அதன்பின் காரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரின் காலிறுதி, அரையிறுதிப் போட்டொ ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை - மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பெங்களூரில் நடைபெற்ற மும்பை - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் 4 நாளில் இறுதியில் 746 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது