Advertisement

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!

கடந்த ஆண்டு நான் முதல் முறையாக கேப்டனாக இருந்ததால் எனக்கு அது எனக்கு ஒரு பாடமாக இருந்தது, கடந்த சீசனில் நான் அதைக் கற்றுக்கொண்டேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Advertisement
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2025 • 12:44 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2025 • 12:44 PM

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 93 ரன்களையும் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஷுப்மன் கில், “அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இன்னும் இரண்டு முக்கியமான ஆட்டங்கள் உள்ளன. பிளேஆஃப் சுற்றுகளுக்குள் எங்களின் வேகத்தை அதிகரிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நான் பேட்டிங் செய்யும்போது, ​​ஒரு பேட்ஸ்மேனாக அல்ல, ஒரு கேப்டனாக விளையாடவும் சிந்திக்கவும் விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு நான் முதல் முறையாக கேப்டனாக இருந்ததால் எனக்கு அது எனக்கு ஒரு பாடமாக இருந்தது, கடந்த சீசனில் நான் அதைக் கற்றுக்கொண்டேன். மேலும் இடைவேளையின் போது நாங்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தோம். எங்கள் ஃபீல்டிங் மோசமாக இருந்தது, அதைப் பற்றி சிந்திக்கவும் எங்கள் ஃபீல்டிங்கிலும் பணியாற்றவும் எங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தது. மேலும் சாய் சுதர்ஷன் இந்த சீசனில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்.

Also Read: LIVE Cricket Score

நீங்கள் நிலைமைகளையும் சூழ்நிலையையும் பார்க்கிறீர்கள், ஆட்டத்தை முடிப்பது பற்றி நாங்கள் பேசுகிறோம், அதை வேறு யாரிடமும் விட்டுவிடக்கூடாது, ஏனெனில் இது போன்ற ஒரு விக்கெட்டில் இரண்டு விக்கெட்டுகள் அழுத்தத்தை உருவாக்கக்கூடும் என்பதால் நாங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்தோம். இடைவேளைக்கு முன் உண்மையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, இருப்பினும் ஒருவாரம் இடைவேளை கிடைத்தது எங்களுக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement