
For greater success as batsman, Virat Kohli should give up captaincy in all formats: Shahid Afridi (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாகக் கடந்த செப். மாதம் அறிவித்தார். அதேபோல ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.
இது அவரது ரசிகர்களுக்கு மட்டமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, பும்ரா, ஷமி ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணியில் ரேஹித் சர்மா கேப்டனாகவும், ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரேஹித் சர்மாவுக்கு முழு நேர கேப்டனாக இது முதல் தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.