
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை.
மேலும் டாஸ் நிகழ்வின்போது அஸ்வினைத் தேர்வு செய்யாதது பற்றி கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, “இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர் தி விக்கெட்டிலிருந்து பந்துவீசுவதால் அது ஜடேஜாவின் பந்துவீச்சுக்குப் பொருத்தமாக இருக்கும்” என்றார்.