தோனி, கோலியை மறைமுகமாக தாக்கும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஹீரோ என்ற பிராண்ட்-ஐ அழிக்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக பேசியுள்ளார்.

Gambhir slams 'player worshipping', answers 'Dhoni then, Kohli now' query (Image Source: Google)
இந்திய அணியில் தோனியை மறைமுகமாக தாக்குபவரும், சர்ச்சை கருத்துகளை கூறுபவருமாக ரசிகர்களால் பார்க்கப்படுபவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது தனது கவனத்தை விராட் கோலியின் மீது திருப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட்டே கோலி மட்டும் தான் என்பது போல விளம்பரப்படுத்துவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்பீர், “ஒரு ஹீரோவை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களை மட்டுமே புகழும் பழக்கம் இந்தியாவை ஆட்டிபடைத்து வருகிறது. முன்பு தோனி இருந்தார், தற்போது விராட் கோலி இருந்து வருகிறார். இதெல்லாம் எப்படி ஏற்படுகிறது? மற்ற வீரர்களெல்லாம் அணிக்காக உழைப்பது யார் கண்களுக்கும் தெரிவதில்லை.
ஆசியக்கோப்பையில் விராட் கோலி சதமடித்துவிட்டார் என நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் அதே போட்டியில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை கைப்பற்றி கரியர் பெஸ்ட் பவுலிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் அதுகுறித்து யாருமே பேசவில்லை. கமெண்ட்ரியில் கூட நான் மட்டுமே அவரின் சாதனை குறித்து பேசினேன். இது மிகவும் கேவலமான ஒன்றாகும்.
இந்த பிரச்சினைகளுக்கு முதல் காரணம் சமூகவலைதளம் தான். அதிகப்படியான ஃபாலோவர்கள் இருந்தால் அவர் பெரிய வீரர் என புகழப்படுகிறார். ஃபாலோவர்கள் குறைவாக இருப்பவர்கள் நல்ல வீரர்கள் இல்லையா??.. 2வதாக ஊடகங்கள் குறிப்பிட்ட ஒரு வீரரை மட்டும் அடிக்கடி செய்தி வெளியிடுவதும், காரணமாக பார்க்கப்படுகிறது. இதனையெல்லாம் மாற்ற வேண்டும்” என கம்பீர் கூறியுள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News