
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோற்ற போதும், ரசிகர்களுக்கு ஆறுதலாய் இருந்த விஷயம் விராட் கோலியின் சதம் தான். 1000 நாட்களுக்கும் மேலாக சதமடிக்காமல் இருந்த அவரின் காத்திருப்பும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முடிவு பெற்றது.
அந்த போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சதம் மட்டுமல்லாமல் அந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ( 276 ரன்கள் ) 2ஆவது இடத்தை பெற்று அசத்தினார். ஆனால் கோலி சதமடித்ததில் இருந்துமே தற்போது புதிய குழப்பம் உருவாகியுள்ளது.
அதாவது விராட் கோலி சதமடித்தது ஓப்பனிங் வீரராக களமிறங்கி தான். எனவே அவர் ஓப்பனிங் வீரராக களமிறங்கினால் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும். கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் கூட விளையாடுவார் என்பதால் இந்தியாவின் ஓப்பனிங்கை மாற்றலாம் என பல வல்லுநர்கள் கூறினர்.