Advertisement

பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!

சென்னை விக்கெட்டில் மார்சை அவுட் செய்த விதம், இன்று டெல்லி விக்கெட்டில் இப்ராகிமை அவுட் செய்த விதம், உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் முழுமையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதை காட்டியது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan October 12, 2023 • 17:08 PM
பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்! (Image Source: Google)
Advertisement

கடந்த டி20 உலக கோப்பையின் போது இந்திய அணி காயத்தால் தவறவிட்டதில் பும்ராவின் இழப்பு மிகப்பெரியதாக இருந்தது. அது இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. தற்பொழுது காயத்தில் இருந்து திரும்ப வந்த அவர் ஆசிய கோப்பை தொடரில் மிகச்சிறந்த பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்தார். அவருக்கு அந்தத் தொடரில் பெரிய விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவர் பந்துவீச்சு மிகக் கூர்மையாக இருந்தது.

தற்பொழுது உலக கோப்பையில் அவருடைய பந்து வீச்சுக்கு விக்கெட்டுகளும் நல்ல முறையில் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. காயத்திற்கான மறுவாழ்வில் இருந்த அவர் மீண்டு வருவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், இன் ஸ்விங் வீசுவதில் சிறப்பான முறையில் தயாராகி வந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 35 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றிய அவர், பேட்டிங் செய்ய சாதகமான டெல்லி ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 39 ரன்களுக்கு நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Trending


பும்ரா குறித்து பேசிய கம்பீர், “சென்னை விக்கெட்டில் மார்சை அவுட் செய்த விதம், இன்று டெல்லி விக்கெட்டில் இப்ராகிமை அவுட் செய்த விதம், உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் முழுமையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதை காட்டியது. நிலைமை இப்படி இருக்க நாம் வெகு சீக்கிரத்தில் பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிட்டு பார்த்தோம். ஆனால் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

போட்டியில் ஒவ்வொரு கட்டத்திலும் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வேறு எந்த பந்துவீச்சாளரையாவது உங்களால் காட்ட முடியுமா?. சிலர் புதிய பந்தில், சிலர் இறுதி கட்டத்தில் நன்றாக பந்து வீசுவார்கள். ஆனால் பும்ரா மட்டும்தான் புதிய மற்றும் பழைய பந்தில் இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இந்த ஆடுகளத்தில் அவர் விக்கெட்டை எடுத்த விதம், அவர்கள் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்கள் என்பது கிடையாது. 

அவர்கள் டிஃபென்டிங் செய்யும் போது இவர் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருக்கு ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி அவசியம் கிடையாது. தற்போது உலக கிரிக்கெட்டில் வெள்ளைப்பந்து சிவப்புப்பந்து என ஒரே சிறந்த வேகப்பந்துவீச்சாளர் மட்டுமே இருக்கிறார் அவர் பும்ரா மட்டும்தான். அவரால் பேட்ஸ்மேன் கடை எல்லா வகையான பந்திலும் ஆட்டம் இழக்க வைக்க முடியும்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement