
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணி மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இந்த முறை பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட துணை கேப்டன் சதாப் கான் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 75 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் கேப்டன் பாபர் ஆசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். மேல் வரிசை பேட்ஸ்மேன்கள் யாரிடம் இருந்தும் அதிரடியான ஆட்டம் வரவில்லை.
கடைசி கட்டத்தில் ஷதாப் கான் மற்றும் இஃப்திகார் தலா 40 ரன்கள் கொஞ்சம் அதிரடியாக எடுத்தார்கள்.இதன் காரணமாக பாகிஸ்தான் 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. கடைசி நான்கு ஓவரில் அதிரடி காட்டியதால் இந்த ரன் வந்தது.