
Gautam Gambhir wants DC veteran to replace Rishabh Pant as franchise captain next season (Image Source: Google)
பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
மேலும் கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் இறுதிவரை சென்று கோப்பையை நழுவவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் ரிஷப் பந்த்தின் கேப்டன்சியில் பிளே ஆஃபிற்கு முன்னேறி, 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் தோற்று வெளியேறியது.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனின் முதல் பாகத்தில் காயம் காரணமாக ஆடாததால், ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரிஷப் பந்த்தின் கேப்டன்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக ஆடினாலும், அவரது கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. இக்கட்டான நேரங்களில் அவரது கேப்டன்சி முடிவுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.