Advertisement

இணையத்தை கலக்கும் ரிஷப் பந்த்தின் ட்வீட்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் கால்பந்து விளையாட்டை நேரில் சென்று பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan June 30, 2021 • 15:41 PM
‘Good Experience’: Rishabh Pant Watches Euro 2020
‘Good Experience’: Rishabh Pant Watches Euro 2020 (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டு யூரோ கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Trending


இப்போட்டி லண்டனில் வெம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியை காண பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இப்போட்டியை மைதானத்திலிருந்து இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் நேரில் பார்த்து ரசித்துள்ளார்.

 

இதனைக் கவனித்த ரசிகர்கள் பல ரிஷப் பந்த்துடன் இணைந்து செல்ஃபி மற்றும் ஆட்டோகிராஃப்களைப் பெற்றுச்சென்றனர்.

இதுகுறித்து ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் இடையேயான கால்பந்து போட்டியை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ரிஷப் பந்த்தின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement