Football
ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி; வாழ்த்து கூறிய விராட் கோலி!
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அறியபடுபவர் சுனில் சேத்ரி. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மோகன் பாகன் அணிக்காக களமிறங்கி தனது திறமையால் 2005ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்து தற்போதுவரை விளையாடி வருகிறார். மேலும் இந்திய அணிக்காக அதில கோல்களை அடித்துள்ள வீரர் எனும் சாதனையையும் சுனில் சேத்ரி படைத்துள்ளார். அதேசமயம் சர்வதேச கால்பந்து விளையாட்டில் அதிக கோல்களை அடித்த 4ஆவது வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் தற்சமயம் 39 வயதை எட்டியுள்ள சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் தானது சர்வதேச கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பாக தனது சமூக வலைதள பக்கங்களில் காணொளி வாயிலாக இன்று அறிவித்துள்ளார்.