Advertisement

தரவரிசையில் முதலிடம் பிடித்தது எப்படி - சூர்யகுமார் யாதவ் பதில்!

சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது குறித்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மனம்திறந்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan November 04, 2022 • 20:43 PM
Green signal to express himself fearlessly behind Suryakumar's ascent to top of T20I rankings
Green signal to express himself fearlessly behind Suryakumar's ascent to top of T20I rankings (Image Source: Google)
Advertisement

ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் இரண்டு முறை அரைசதம் விளாசி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாவும் முதலிடம் பிடித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையும் சூரியகுமார் படைத்திருக்கிறார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அடி எடுத்து வைத்து 20 மாதங்கள் ஆன நிலையில் சூரியகுமார் முதலிடம் பிடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தனது ரகசியம் குறித்து சூரியகுமார் ஐசிசி தளத்திற்கு பேசியிருக்கிறார். 

Trending


அதில் பேசிய அவர், “இந்திய அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த சுதந்திரமே என்னால் சிறப்பாக விளையாட காரணமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் ஆட்டத்தின் நெருக்கடியான கட்டத்தில் தான் நான் பேட்டிங்கில் களமிறங்கி வருகிறேன். ஆனால் இந்திய அணி நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள். அதிரடியாக ஆட எனக்கு பச்சை சிக்னல் வழங்கினார்கள். நான் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்கினாலும் அணி கொடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்வேன்.

பத்து முறை பேட்டிங் செய்யும்போது நான் ஏழு முறை ரன்கள் அடித்தாலே, அதனை நான் பாசிட்டிவான விஷயமாக கருதுகிறேன். டி20 தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய கடின பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் இந்த பயணம் மிகவும் கடினமாக இருந்தது.

ஆனால் அந்த இடத்தில் நீடிக்க இன்னும் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது எனக்கு பெரிய சவாலாக இருக்கும். அதில் என்னால் முடிந்தவரை நான் சிறப்பாக செய்வேன். டி20 கிரிக்கெட்டில் நான் இதுவரை கற்றுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். பேட்டிங் செய்யும்போது, ஏழாவது ஓவரிலிருந்து 15 வது ஒவர் வரை பந்து வீசும் போது எதிரணி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

அந்த இடத்தில் நான், பேட்டிங் செய்யும்போது எனக்கே சவால்கள் வைத்துக் கொண்டு அதிரடியாக ஆட முயற்சி செய்வேன். நான் நல்ல ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே பின் வரிசையில் வரும் வீரர்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க சுலபமாக இருக்கும். இதனால் அந்தப் பணியை நான் சிறப்பாக செய்வேன்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement