
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் இரு குழுக்காலாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இத்தொடரின் இறுதிப்போட்டியில் மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டி பொதுவான இடத்தில் நடந்தது. அதாவது அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாட முடியாத நிலைமை இருந்தது.
தற்போது கரோனா கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் களம் காண இருப்பது கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.
இதில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு சாம்பியன் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.