Advertisement
Advertisement
Advertisement

சாலை விபத்தில் சிக்கிய ராபின் மின்ஸ்; கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 03, 2024 • 20:16 PM
சாலை விபத்தில் சிக்கிய ராபின் மின்ஸ்; கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்!
சாலை விபத்தில் சிக்கிய ராபின் மின்ஸ்; கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஐபிஎல் குறித்த செய்திகளும் அதிகரித்து வருகிறது.

Trending


முன்னதாக இத்தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ராபின் மின்ஸை குஜராத் டைட்டன்ஸ் அணி 3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதுவரை ஒருசில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ராபின் மின்ஸ் பெயர் ஏலப்பட்டியலில் வந்ததும் அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆர்வம் காட்டினர். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 

இதுவரை ஐபிஎல் தொடரில் அறிமுகமில்லாத ராபின் மின்ஸிற்கு சிஎஸ்கே - குஜராத் அணிகள் போட்டி போட்டு ஏலத்தில் இறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேபோல் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் முதல் பழங்குடியின வீரர் எனும் பெருமையையும் ராபின் மின்ஸ் பெறவுள்ளார். இப்படி அவர் மீதான எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், ராபின் மின்ஸ் குறித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியும் இன்று வெளியாகியுள்ளார்.

அதன்படி, ராபின் மின்ஸ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோது விபத்தியில் சிக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்துள்ள மருத்துவர்கள், அவரது உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ராபின் மின்ஸின் விபத்து குறித்து அவரது தந்தை ஃபிரான்சிஸ் கூறுகையில்,  “மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தனது கட்டுப்பாட்டை இழந்ததில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ராபின் மின்ஸ் விபத்தில் சிக்கி இருப்பது குஜராத் அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement