
ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஐபிஎல் குறித்த செய்திகளும் அதிகரித்து வருகிறது.
முன்னதாக இத்தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ராபின் மின்ஸை குஜராத் டைட்டன்ஸ் அணி 3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதுவரை ஒருசில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ராபின் மின்ஸ் பெயர் ஏலப்பட்டியலில் வந்ததும் அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆர்வம் காட்டினர். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.