ராயல்ஸ் அணியின் திட்டங்களுக்கு கௌகாத்தி விக்கெட் பொருந்தவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மாநில போட்டிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று கௌகாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய இரண்டாவது தோல்வியைத் தழுவியுள்ளது. அதிலும் குறிப்பாக நேற்றைய தின தங்களுடைய சொந்த மைதானத்தில் அந்த அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மாநில போட்டிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விருப்பம் புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், போட்டி தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பிறகு தான் ராஜஸ்தான் அணி தங்கள் சொந்த மாநிலத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று கற்பனை செய்வது கடினம். ராஜஸ்தானுக்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆடுகளங்கள் தேவை, ஆனால் கவுகாத்தி விக்கெட் அவர்களின் உத்திக்கு பொருந்தவில்லை.
கௌகாத்தி, ராஜஸ்தானை விட கொல்கத்தாவிற்கு மிக அருகில் உள்ளது..மேலும், ஈடன் கார்டனில் கேகேஆர் இருக்கும் சாதகம் இந்த மைதானத்தில் அவர்களுக்கு கிடைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா கூறுவது போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய அடுத்த போட்டியையும் இதே கௌகாத்தி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
மேற்கொண்டு அந்த அணி தங்களுடைய சொந்த மாநில மைதானமான ஜெய்ப்பூரில் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தான் தங்களுடைய முதல் போட்டியை விளையாடவுள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுக்கு இருக்கு சவால்களை சமாளித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.
Win Big, Make Your Cricket Tales Now