
குளோபல் சூப்பர் லீக் 2025: ராங்பூர் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஜான்சன் சார்லஸ், ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக கயானா அமேசன் வாரியஸ் அணி சாம்பியன் பாட்டத்தை வென்றது.
குளோபல் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமேசன் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் சார்லஸ் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் எவின் லூயிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சார்லஸுடன் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்து ஆசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 67 ரன்களில் ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 19 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபெர்ட் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.