Advertisement

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்!

ஆர்சிபி வெற்றி பேரணியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Advertisement
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்!
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 04, 2025 • 10:45 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 04, 2025 • 10:45 PM

இதனையடுத்து இன்றைய தினம் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பங்கேற்க ரசிகர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியில் திரண்டிருந்தனர். மேலும் ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பல்வேறு வாயில்களிலும் நுழைய முயற்சித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்து. 

இதில் சிலர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழையவும் முயற்சி செய்தனர். இதனையடுத்து காவலர்கள் தடியடி நடதிதி ரசிகர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்றபட்ட கூட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கு அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து இச்சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “பெங்களூருவில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், “பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது மிகவும் துயரமானது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இதயம் கணிந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் அமைதியும் பலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என்று கூறிவுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது பதிவில், "பேச்சில்லாமல். உணர்வற்று. அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஐபிஎல் வெற்றிக்கான வெற்றி அணிவகுப்பு இது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காகவும் என் இதயம் துடிக்கிறது” என்று கூறியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது பதிவில், "பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பல கிரிக்கெட் ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்ற இதயத்தை உடைக்கும் செய்தியானது, நம் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்களை ஒன்றிணைக்கும் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வில் இருண்ட நிழலைப் பதித்துள்ளது.

Also Read: LIVE Cricket Score

இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் நான் அவர்களுடன் இணைந்து நிற்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இவர்களின் சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement