
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றன. அதன்பின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அயர்லாந்து செல்லவுள்ளது. இந்த நிலையில், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த பிறகு அவர் எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பொறுத்தே அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவாரா எனத் தெரியும்.