
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் கரணமாக அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.இதன் காரணமாக எஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவுள்ளார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அவர்களைத் தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மூன்று மற்றும் நான்காம் இடத்தை நிரப்புவார்கள்