
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சம் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அரைசதத்தால் 50 ஓவர்களில் 350 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தாக்கூர் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரின் வேகத்தில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தால், எவ்வளவு சோகமடைந்திருப்போம் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். எங்கள் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை அழுத்தமான நேரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.