Advertisement

மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!

மும்பையில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான டிஒய் பாட்டில் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா ரிலையன்ஸ் ஒன் அணியின் கேப்டானக செயல்படவுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 26, 2024 • 12:38 PM
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும், சமீப காலங்களில் டி20 அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தவர் ஹர்திக் பாண்டியா. இவர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்து, அத்தொடரின் பாதியிலேயே விலகினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் என அனைத்து தொடர்களிலிருந்தும் விலகினார். 

இதனால் அவர் ஐபிஎல் தொடரில் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகினார். அதற்கேற்றது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் நடப்பு சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமித்து அதிரடி காட்டியது. 

Trending


இதன்மூலம் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் உறுதியானது. இதனையடுத்து அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மும்பையில் நடைபெறும் டிஒய் பாட்டில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடி வருகிறார். அத்தொடரில் ரிலையன்ஸ் ஒன் என்ற அணிக்காக விளையாடும் ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ரிலையன்ஸ் அணியில் திலக் வர்மா, நெஹால் வதேரா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், விஷ்னு வினோத் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்த இஷான் கிஷான் இத்தொடரின் பிபிசிஎல் அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அணியில் சந்தீப் சர்மா, ராகுல் திரிபாதி அனுகுல் ராய், ஸ்ரேயாஸ் கோபால், நமந்தீப் சிங் ஆகியோரும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement