இந்திய அணிக்காக இன்னும் 5-6 கோப்பைகளை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நாட்டிற்காக மேலும் பல கோப்பைகளை வெல்ல ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
மேலும் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நாட்டிற்காக மேலும் பல கோப்பைகளை வெல்ல ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “என்னால், முடிந்தவரை பல சாம்பியன்ஷிப்களை வெல்வதுதான் எப்போதும் முக்கியம். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, என்னுடைய ஆட்டம் இன்னும் முடியவில்லை, இந்திய அணிக்காக இன்னும் 5-6 கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று கூறியிருந்தேன். இப்போது எனது பட்டியலில் மேலும் ஒரு கோப்பை செர்ந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் எனது வேலையை என்னால் முழுமையாக செய்ய முடியவில்லை. அதனால் அன்று என்னால் சாம்பியன்ஸ் கோப்பை வெற்றியாளர் என்று கூற முடியவில்லை. ஆனால் இப்போது நான் சாம்பியன்ஸ் கோப்பை வெற்றியாளர் என்று சொல்லக்கூடிய இரவு என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் இப்போது ஒரு சாம்பியன்ஸ் கோப்பை வெற்றியாளர் என்று கூறும் போது அது நன்றாக இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை எப்போதும் அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம். இந்த வெற்றி இந்தியாவுக்கானது, இந்தியர்களுக்கானது. இப்போது எங்களுடைய அடுத்த பணி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரை வெல்வது தான். இந்த தொடரை இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தும் நிலையில் அதில் நான்கள் கோப்பையை வெல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் வார்த்தைகளை கேட்ட ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். மேற்கொண்டு எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா செயல்படவுள்ளார். அதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து தன்னுடைய கோப்பை கனவை நிரைவேற்றுவாரா என்ற என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now