Advertisement

‘ஹர்சல் தான் எங்களுடைய டெத் பவுளர்’ - விராட் கோலி 

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்த

Bharathi Kannan
By Bharathi Kannan April 10, 2021 • 10:54 AM
Harshal Is Going To Be Our Death Bowler, Says RCB Captain Kohli
Harshal Is Going To Be Our Death Bowler, Says RCB Captain Kohli (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கோலாகலாமகத் தொடங்கியது. நேற்று தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.

சீசனின் முதல் போட்டியே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக கடைசி பந்துவரைச் சென்றது. பரபரப்பான இப்போட்டியின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Trending


இப்போட்டியில் பெங்களூரு அணியின் ஹர்சல் பட்டேல் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்து, ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

போட்டி முடிவுக்கு பிறகு பேசிய விராட் கோலி, ‘டெல்லி அணியிலிருந்து ஹர்சல் பட்டேலை நாங்கள் ஏலத்தில் வாங்கினோம். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அவர் தனது பணியை மிகச்சிறப்பாக செய்துவருகிறார். மேலும் அவர் தனக்கானத் திட்டங்களுடன் தெளிவாக இருக்கிறார். எனவே இந்த சீசனில் ஹர்சல் தான் எங்களுடைய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக இருப்பார் என்று தோன்றுகிறது’ என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement