Advertisement
Advertisement
Advertisement

இந்திய அணியின் தற்போதைய ஹீரோ இவர் தான் - கம்பீரின் பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி!

இந்திய கிரிக்கெட்டில் தற்போதைய ஹீரோ விராட் கோலியோ,ரோஹித் சர்மாவோ கிடையாது என்று முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 29, 2022 • 11:28 AM
'Has taken a lot of pressure off Kohli, Rohit': Gautam Gambhir on senior India batters' form in T20
'Has taken a lot of pressure off Kohli, Rohit': Gautam Gambhir on senior India batters' form in T20 (Image Source: Google)
Advertisement

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அப்போது ரோஹித், ராகுல், சூர்யகுமார், ஹார்திக் என நடையைக் கட்ட, கோலி மட்டும் தனி ஒருவனாக கடைசிவரை களத்தில் இருந்தார். எப்படி போட்டாலும் அடிக்குறாரு பாஸ்னு ஹரிஸ் ராவுஃப்பை கதறவிட்டு அணிக்கு கோலி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்ததுதான், வெற்றிக்கு முக்கிய காரணம். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்துக்கு எதிராகவும் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து, நெட் ரன்ரேட் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ரோகித் சர்மாவும் நெதர்லாந்துக்கு எதிராக 37 பந்துகளில் அரை சதம் கடந்தார். 

Trending


இந்த நிலையில் இந்திய அணி வெற்றி குறித்து பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஒரு வீரருக்கு பாராட்டு கிடைக்க வேண்டும் என்றால் அது சூரியகுமார் யாதவுக்கு தான் என்று கூறியுள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “சூர்யகுமார் யாதவுக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்யும்போது சாதகமான சூழல் இருந்தது இல்லை. ஏனெனில் அவர் எப்போதும் பவர்பிளேவில் விளையாடியது கிடையாது. இருப்பினும் கிட்டதட்ட ஆயிரம் ரன்களும், அதுவும் நல்ல ஸ்ட்ரைக் ரெட்டும் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி, ராகுல்,ரோஹித் சர்மா ஆகியோர் மீதான அழுத்தத்தை பெரும் அளவு சூர்யகுமார் யாதவ் குறைக்கிறார். 

சூர்யகுமார் டாப் வரிசையில் அதிரடியாக தொடர்ந்து விளையாடுவதால் மட்டுமே இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் 180 ரன்களுக்கு மேல் அடிக்கிறது. இதனால் சூர்யகுமார் யாதவ்தான் ஹூரோ” என கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

சூரிய குமாரை பாராட்டுவதில் தவறில்லை. காரணம் நடப்பாண்டி ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சூரியகுமார் முதலிடத்தில் வகிக்கிறார். என்றாலும் அதற்காக விராட் கோலியை ஏன் பாராட்டுகிறீர்கள் என்பது போல் கௌதம் கம்பீர் பேசி வருவது ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் ஹீரோ கலாச்சாரம் பரவி வருவதை நிறுத்த வேண்டும் என கம்பீர் கூறிய நிலையில் தற்போது அணி இடையில் பிளவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement