
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்ரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்றது.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி, அடுத்த போட்டிக்கான ஆடும் லெவனில் அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.