
அண்மையில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியாலும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் வாங்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் முதல் 2 இடங்களை இருவரும் பிடித்துள்ளனர்.
இவருக்கு பின் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான சாம் கரணுக்கு ரூ.18.50 கோடி வாங்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சாம் கரணை பஞ்சாப் அணி அடுத்த ஐபிஎல் தொடருக்கான தக்க வைக்கப்பட்ட வீரராக பஞ்சாப் அணி அறிவித்தது.
அவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டு வாங்கிய சாம் கரண், 14 போட்டிகளில் விளையாடி 276 ரன்களும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஷிகர் தவான் காயமடைந்து வெளியேறிய போது, பஞ்சாப் அணியின் கேப்டனாக வெற்றிகளை பெற்று கொடுத்தார். இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஏலத்தை முன்னிட்டு பஞ்சாப் அணி சாம் கரணை விடுவித்திருக்க வேண்டும் என்று ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.