
டி20 உலக கோப்பை தொடருக்குப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் ஒரு அணியைக் கட்டமைப்பதில் பலவிதமான பரிசோதனை முயற்சிகள் செய்தார்கள். ஆனால் உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பரிதாபமாக படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது.
இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்காக உலகில் உள்ள முன்னணி அணிகள் எல்லாமே ஆயத்த வேலைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணிகளும் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர் இடத்திலும் மற்றும் விக்கெட் கீப்பர் இடத்திலும் மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த இடங்களுக்கான போட்டிதான் தற்போது நடந்து வருகிறது.
இந்த இரண்டு இடங்களுக்கும் சேர்த்து ஒரே வீரர் மிகப் பொருத்தமாக இருக்கிறார். அவர் இசான் கிஷான். இந்தக் காரணத்தால் அவர் மீது இந்திய அணி நிர்வாகத்தின் பார்வை பெரிய அளவில் இருக்கிறது. மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் அவர் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிவேக இரட்டை சதத்தை அடித்து இருந்தார்.