
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 66 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.
முன்னதாக போட்டியின் எந்த நேரத்திலும் தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய பும்ரா கடந்த 2022 ஜூலை மாதம் சந்தித்த காயத்திலிருந்து 2 – 3 முறை மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.
அப்படி அவர் இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை விட பெரும்பாலான போட்டிகளில் ஓய்வெடுத்த அவர் முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறியதால் இவர் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்று கிண்டல்கள் இருந்தன.