
இந்திய அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்று தொடரை சமன்செய்துள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இந்த மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென், டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் மற்றும் தான் எதிர்கொள்ள கடினமாக இருந்த பந்துவீச்சாளர் குறித்து மனம் திறந்துள்ளார்.