
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 16ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகி விருதை வென்ற ஸ்நே ரானாவுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வாழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கம்பேக் குறித்து ஸ்நே ரானா மௌனம் கலைத்துள்ளார்.