Advertisement
Advertisement
Advertisement

சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஷுப்மன் கில்!

ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாக பல சவால்கள் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் கற்றுக் கொண்டு நான் அனியை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 06, 2023 • 13:00 PM
சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஷுப்மன் கில்!
சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் கடந்த 2008ஆம் முதல் அண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2024 ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் துபாயில் இன்னும் சில நாட்களில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. அந்த ஏலத்திற்கு பின்னர் ஒவ்வொரு அணியுமே தங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பட்டியலையும் முழுவதுமாக வெளியிடும்.

அதை தவிர்த்து தற்போதே டிரேடிங் முறையில் சில வீரர்கள் அணிமாற்றமும் செய்துள்ளனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா மும்பை அணியால் டிரேடிங் மூலம் வாங்கப்பட்டுள்ளதால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். கொல்கத்தா அணிக்காக தனது அறிமுக சீசனில் விளையாடி வந்த ஷுப்மன் கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அவரை ஏலத்திற்கு முன்பாக நேரடியாக அணியில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அவருக்கு ஒரு பெரிய தொகையையும் சம்பளமாக வழங்கி அவரின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர்.

Trending


அதற்கு பலனாக அறிமுக ஆண்டிலேயே குஜராத் அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த ஆண்டு குஜராத் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அவரது இந்த அபாரமான திறமை காரணமாக தற்போது அவருக்கு குஜராத் அணி கேப்டன் பதவியையும் வழங்கி உள்ளது.

தற்போது 24 வயதே ஆன ஷுப்மன் கில் விராட் கோலிக்கு அடுத்து இளம் வயதில் ஐபிஎல் கேப்டனான இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஒரு கேப்டனாக எவ்வாறு செயல்படப்போகிறேன்? என்பது குறித்து ஷுப்மன் கில் தனது சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஷுப்மன் கில், “குஜராத் அணியை தலைமை தாங்கி வழிநடத்த இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்காக அவர்கள் வழங்கியுள்ள இந்த கேப்டன் பதவிக்கு நான் என்னுடைய முழு பங்களிப்பையும் வழங்க விரும்புகிறேன். ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாக பல சவால்கள் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் கற்றுக் கொண்டு நான் அனியை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் கேப்டன்சி என்னுடைய பேட்டிங்கிலும், என்னுடைய செயல்பாடுகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வரும் என்றும் நான் நம்புகிறேன். எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி செய்யும் போது பெரிய பெரிய அனுபவ கேப்டன்களுக்கு எதிராகவும் உள்ள சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement