
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதமடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அண்மைக் காலமாக ரன்களை அடிக்கவே அவர் சிரமபப்படுகிறார். ஐபிஎல் 15ஆவது சீசனில் மூன்று முறை கோலி கோல்டன் டக் அவுட் ஆனார். கடந்த 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பிங்க் பந்து டெஸ்டில் கோலி சதம் அடித்தார்.
அதன் பிறகு 3 ஆண்டுகளாக அவரிடம் சதம் எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இங்கிலாந்து எதிராக அவர் விளையாடிய கடைசி 5 போடகளில் கோலி அரை சதம் கூட அடிக்காமல் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் கோலி பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக பேசிய விராட் கோலி, ''நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, நான் ஒரு மாதமாக எனது பேட்டை தொடவில்லை. சமீபத்தில் எனது பலத்தை போலியாக மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இல்லை, உன்னிடம் பலம் இருக்கிறது என்று என்னை நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.