ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. ஆனல் அந்த அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஒருபுறம் ராகுல் சிறப்பாக விளையாடி 68 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கையிலிருந்து வெற்றியை 7 ரன்களில் குஜராத்திடம் தாஃபவார்த்தது.
இந்நிலையில் இத்தோல்விகு குறித்து பேசிய கேஎல் ராகுல், “இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது நடந்தது. எங்கே தவறு என்று விரல் வைக்க முடியாது, ஆனால் இன்று 2 புள்ளிகளை இழந்தோம், இது தான் கிரிக்கெட். நாங்கள் பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருந்தோம் என்று நினைத்தேன். ஏனெனில் நாங்கள் அவரகளை 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தினோம்.