
I Felt Fifty Was Like A Century: Shreyas Iyer On Bengaluru Pitch For Pink Ball Test (Image Source: Google)
இலங்கை அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் இந்திய அணி வீரர்கள் தடுமாற, ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் விளசினார்.
இதில் 10 பவுண்டரிகளும் , 4 சிக்சர்கள் அடங்கும். ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம் மூலம் இந்தியா கௌரவமான இலக்கை எட்டியது.
முதலில் பந்து நன்றாக திரும்பியதால் அனைத்து வீரர்களுமே திணறினர். பின்னர் சுழற்பந்துவீச்சாளர்களை நெருக்கடி தரும் விதமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். பந்து திரும்புவதற்குள் இறங்கி வந்து அடிப்பது , பந்து திரும்புவதற்கு நேரம் தராமல் பேட்டை விளாசி ரன் சேர்ப்பது என புதிய யுத்தியை ஸ்ரேயாஸ் ஐயர் கடைபிடித்தார்.