
சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.
இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்கக்கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐயும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விண்டீஸ் அணிக்கு எதிரான விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கிரிக்கெட் தொடரில் எழுபதாவது சதத்தை அடித்து ஆயிரம் நாளை தொட்டுவிட்டதால் விராட் கோலி எதிர்வரும் ஆசிய கோப்பையில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.