
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணியின் மீது அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, உலகக் கோப்பை தொடர் உற்சாகமளிக்கும் புதிய சவாலை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “உங்களுக்கு முன்னர் ஏதேனும் ஒரு சவால் இருந்தால், நீங்கள் அதை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். உங்களுக்கு முன் கடினமான சூழல் வந்தால் நீங்கள் உற்சாகமடைவீர்கள். அதிலிருந்து நீங்கள் விலகி செல்ல மாட்டீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளைக் கடந்தும் நான் பல சவால்களை எதிர்கொண்டுதான் இருக்கிறேன். அந்த சவால்களில் வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரும் ஒரு சவாலே. இந்த சவால் எனக்கு உற்சாகமளிக்கிறது.