Advertisement
Advertisement
Advertisement

ராகுல் பற்றி எனக்கு சரியாக தெரியாது - அனில் கும்ப்ளே!

இந்திய அணி முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தபோது, அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே, ராகுலின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார்.

Advertisement
'I think he switches on and off for whatever reason': Former coach Anil Kumble on KL Rahul's woes
'I think he switches on and off for whatever reason': Former coach Anil Kumble on KL Rahul's woes (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 29, 2022 • 11:04 AM

டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் துவங்குவதற்கு முன்பு, நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 29, 2022 • 11:04 AM

இருப்பினும், தற்போது சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்களில் ராகுலின் ஆட்டத்தில் திருப்தி இல்லை. ராகுல் எத்தனை ரன்கள் அடித்து, களத்தில் இருக்கிறார் என கூகுளில் தேடுவதற்குள் ஆட்டமிழந்துவிடுகிறார். அவுட்டே இல்லையென்றாலும், ‘நான் அவுட்தான்’ என கடந்த போட்டியில் அவர் நடையைக் கட்டியதெல்லாம் பார்த்தபோது, ‘எப்படியும் அடுத்த ஓவருக்குள்ள அவுட் ஆகிடுவோம். இப்போவே கிளம்பிடுவோம்’ என்ற மனநிலையில் ராகுல் இருந்ததாகவே கருதப்படுகிறது. அந்த அளவுக்கு ராகுலின் மன உறுதி குறைந்திருக்கிறது.

Trending

இதனால், கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு அடுத்தடுத்த போட்டிகளில் ஓபனராக ரிஷப் பந்தை களமிறக்க வேண்டும். அப்போதுதான், அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைக்கும் என பலர் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தபோது, அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே, ராகுலின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார்.

அதில், ‘‘நான் பயிற்சியாளராக இருந்தபோது, உனக்கு என்ன வருமோ அதை செய் என ராகுலிடம் கூறுவேன். பவர் பிளேவில் ராகுலை கட்டுப்படுத்த எந்த பௌலராலும் முடியாது. ஆனால், ஐபிஎலில் விளையாடும்போது ராகுலை நம்பித்தான் மொத்த அணியும் இருப்பதால், அவர் பொறுமையாக விளையாட தொடங்கினார். கடைசி வரைக்கும் விளையாட வேண்டும் என்பதற்காக தனது ஆட்டத்தை அவர் மாற்றிக் கொண்டார்.

ராகுலிடம் இருக்கும் பிரச்சினையே, அவர் திடீரென்று நன்றாக விளையாடுவார், திடீரென்று அமைதியாக ஆடுவார். இந்திய அணியில் அவருக்கான பொறுப்பு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால், ஐபிஎலில் அவர் நிதானமாக விளையாடி பழகிவிட்டதால், இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்கிறார் என நினைக்கிறேன். 

அவர் அன்றைய நாளில் மகிழ்ச்சியாக இருந்தால் அதிரடி, கேட்களை மிஸ் செய்தாலோ, பீல்டிங் சொதப்பினாலோ அல்லது அன்றைய தினம் அவருக்கு நன்றாக இல்லையென்றால், நிதானமாக விளையாடுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement