
பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது சுயசரிதையை சுல்தான் என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். சுல்தான் புத்தகத்தில் ஒரு நினைவுக் குறிப்பு பற்றிய விவாதத்தின் போது வாசிம் அக்ரம் சென்னை விமான நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.
அதில், “அக்டோபர் 2009 ஆம் ஆண்டு நான் என் மறைந்த மனைவியுடன் சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்தேன். எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் விமானம் தரையிறங்கியது. எனது மனைவி மயக்கமடைந்தாள், நான் அழுகிறேன். எங்களிடம் இந்திய விசா இல்லை. எங்கள் இருவரிடமும் பாகிஸ்தான் பாஸ்போர்ட்ஸ் மட்டும் இருந்தது.
இருந்தாலும் அங்கு இருந்தவர்கள் என்னை விமான நிலையத்தில் அங்கீகரித்தனர். "சென்னை விமான நிலையத்தில் உள்ளவர்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் சுங்க மற்றும் குடிவரவு அதிகாரிகள் விசாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள். இந்த சம்பவத்தை கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதனாகவும் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று அக்ரம் கூறினார்.