
உலகக்கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைப்பெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 229 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் போனதால் எய்டன் மார்க்ரம் கேப்டனாகவும், ரீஸா ஹென்றிக்ஸ் பவுமாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராகவும் களம் இறங்கினார்கள்.
பவுமாவிற்கு பதிலாக களம் இறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிக்ஸ் 75 பந்துகளில் 85 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அணியின் ரன் குவிப்பிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இந்நிலையில் இந்த போட்டியில் நான் விளையாடுவேனா என்பது போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னரே எனக்கு தெரியவந்தது என ஹென்றிக்ஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ரீஸா ஹென்றிக்ஸ், “நான் இந்த போட்டியில் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய ரன் குவிப்பை நான் துவங்கும் போது சற்று கடினமாக இருந்தாலும் இறுதியில் நல்ல இன்னிங்சை விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.