கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சாளராக பர்ப்பிள் தொப்பியினை கைப்பற்றியிருந்தார். 31 வயதாகும் ஹர்ஷல் படேல் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இதுவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் அவருடைய கிரிக்கெட் கரியரையே மாற்றிய ஆண்டாக கடந்த ஆண்டு இருந்தது. ஏனெனில் கடந்த சீசனில் மட்டும் 32 விக்கெட்களை அவர் வீழ்த்தி பிராவோவின் சாதனையை சமன் செய்து இருந்தார்.
அவருடைய ஸ்லோ பால்களும் எதிர்பாராத நேரத்தில் யார்க்கர் வீசுவது போன்ற சில திறன்களை அவர் வைத்திருப்பதனால் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். இந்நிலையில் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தியும் அவரை பெங்களூரு அணி தக்கவைக்காதது குறித்து பல கருத்துக்கள் இருந்து வந்தன. இந்நிலையில்தான் பெங்களூர் அணியால் தான் ஏன் தக்க வைக்கப் படவில்லை என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.