
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிமேற்கொன்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலத்தை இழந்து வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போது நீங்கள் இந்தியாவுக்கு சென்று பாருங்கள் அங்குள்ள மக்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதில்லை.
இப்பொது எல்லாம் ஐபிஎல் மீது தான் அவர்களுடைய ஆர்வம் இருக்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது. அது நிச்சயம் கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான். ஆனால் ஐபிஎல் தொடர் உங்களுக்கு எவ்வளவு காலம் தான் கை கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.