
ICC Asks Emirates Cricket Club To Investigate Crowd Behaviour In T20 World Cup (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பையின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் டிக்கெட்டுகள் இன்றி போட்டியை மைதானத்தில் காண வந்தன என்ற குற்றச்சாட்டை ஐசிசி முன்வைத்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் போட்டியைக் காண 16ஆயிரம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் அனுமதியின்றி மைதானத்திற்கு வந்துள்ளனர்.